Wednesday, December 25, 2013

மண் தின்னும் குழந்தைகளா? - Dr.S.வெங்கடாசலம்




மண் தின்னும் குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. மண் மட்டுமன்றி சாம்பல், காகிதம்,கோலப்பொடி, விபூதி, பல்பொடி, குச்சி, சாக்பீஸ், துணிஎன்று உண்ணத்தகாத பல பொருட்களை விரும்பி ருசித்துச் சாப்பிடும் குழந்தைகளை லண்டன் மலர் மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து விரைவில் மாற்ற முடியும்.

பொதுவாக
 குழந்தைகளுக்கு ஒரு வயதை நெருங்கும் போதிலிருந்து இரண்டு வயது வரை கண்ணில்கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும் அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டு, முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்தால் வளரும் பருவத்தில் உடல்நலக் கேடுகளை உருவாக்கும். இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்டகுழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப்பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள்,ரத்தசோகை, மனவளர்ச்சி குறைபாடு போன்றகாரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி,வளர்ந்து நீடிக்கிறது.

மேலும்
 அடித்தட்டுவர்க்க ஏழ்மை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம்இப்பழக்கம் ஒப்பிட்டளவில் அதிகம் நிலவுகிறது. அதேபோல் நல்ல மனவளர்ச்சியுடன் உள்ள குழந்தைகள் உணவு அல்லாத இதரப் பொருட்களைத் தின்றாலும் உரிய காலத்தில் நிறுத்தி விடுகின்றனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இப்பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்கின்றனர். 
குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா,அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா,கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்து கள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட்,செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 

மண்ணும் காகிதமும் தின்னும் பழக்கமுடைய
 நான்கு வயதுச் சிறுமியை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு மலம் மிக இறுகலாகவும் சற்று கருநிறமாகவும் சிரமப்பட்டு வெளியேறுகிறது. ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் வலி தாங்காமல் அழுகிறாள். உணவையோதிண்பண்டங் களையோ விரும்பி உண்பதில்லை. மண் தின்பதும் பேப்பர்களை மென்று ருசித்துத் தின்பதும் எவ்வளவு திட்டி அடித்த போதும் நிறுத்த முடியவில்லை. சில மாத காலம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வளர வளரச் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறிய வலுவற்ற கருத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

 இந்தக் குழந்தைக்கு ஹோமியோபதியில் நைட்ரிக் ஆசிட் என்ற மருந்தும், மலர் மருத்துவத்தில் செர்ரிப்பழம் மற்றும் வால்நட் போன்ற மருந்துகளும் கொடுக்கப்பட்டது. பத்து நாட்களில் குழந்தையின் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. மேலும் சில நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தபின் சிறுமி முழு நலம் அடைந்தாள். அவள் இப்போது மண்,காகிதம் திண்பதில்லை. உணவை விரும்பி உண்கிறாள். மலச்சிக்கல் தொந்தரவோ, வலிகளோ இல்லை. பெற்றோருக்கும் நிம்மதி.

மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை,  சந்தோஷம், பயம், தாழ்வுமனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக் குறைகூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன ஆற்றல்களை அதிகரிக்கவும் மலர் மருந்துகள்அற்புதமாக பயனளிக்கின்றன. சிறுவர்களிடம் காணப்படும் திருட்டு, புகை, குடிப்பழக்கம் போன்றவற்றையும் மலர் மருந்துகளால் மாற்ற இயலும். குழந்தைகளுக்கு மட்டுமன்றி எந்த வயதின ருக்கும் இம்மருந்துகள் பயன்படும். எதிர்மறையான இயல்புகளை நீக்கி மனநலத்தையும், உடல்நலத்தையும் அளிப்பதே இவற்றின் சிறப்பம்சம்.

Sunday, December 22, 2013

ஸ்கேன் அவசியமா?

உலகமே கணிணிமயமாகிவிட்டது. மருத்துவத்துறையும் எண்ணிலடங்கா தளவு வளர்ச்சிகளை எட்டியுள்ளது. நோய்களையும் அவற்றின் தன்மைக ளையும், வளர்ச்சிப் போக்குகளையும் கண்டறிவதில் எண்ணற்ற கருவி களும் வழிமுறைகளும் வந்து நிறைந்துவிட்டன. அவைகளுள் மருத்துவர் களுக்கு மிக உதவிகரமாக இருப்பது மருத்துவ ஸ்கேனிங் முறை.
ஸ்கேனில் உள்ள வகைகள் 1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் 2. சி.டி. ஸ்கேன் 3. எம்.ஆர்.ஐ. ஸ்கேன்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கண்ணுக்குத் தெரியாத, காதுகளுக்குக் கேட்காத நுண் ஒலி அலைகளின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து திரையில் பார்த்து நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது. C.T. ஸ்கேன் (Computerised Tomography) என்பது X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது. M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. இவைகளில் குறைந்த செலவில் பார்க்கக்கூடியது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும்.
இந்த அல்ட்ரா சவுண்ட் எனப்படும் ஸ்கேன் முறையில் கெடுதலோ, பக்கவிளைவுகளோ, பின் விளைவுகளோ இல்லை என்று கூறப்படுகிறது. பொதுவில் ஸ்கேன் செய்து நோயினை கண்டறிவதன் மூலம் அது அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயா அல்லது மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கக்கூடிய நோயா என்பதை ஆங்கில மருத்துவமானாலும் சரி, மாற்றுமருத்துவங்களானாலும் அவரவர் வரைமுறைகளுக்கேற்ப தீர்மானிக்க உதவுகிறது.

அக்குப்பங்சர், சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்றுமருத்துவ முறைகளின் பூர்வீக அணுகுமுறை என்பது நாடிபார்த்தல் ஆகும். ஹோமியோபதி,பாச் மலர் மருத்துவ முறைகளின் அணுகுமுறை நோய்க்குறிகளை,  நோயாளியின் மனநிலையை ஆராய்தல் ஆகும். ஆயினும் இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் விதவிதமான நவீன சிக்கலான நோய்கள் உற்பத்தியாகின்றன. சற்றே கவனப்பிசகாக, நோய் நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டாலும், தவறுகள் நேர்ந்தாலும் பெரும்பாதிப்புகளையும் மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வலதுபக்க வயிற்றுப் பகுதியில் வலிகள் தோன்றும் போது சிறுநீரகக் கல்லால் அவதியா குடல்வால் நோயால் அவதியா அல்லது வேறு பிரச்சனையா என்பதை சரியாகக் கண்டறிய வேண்டும். சிறுநீரகக்கல் நோய் என்றால் கற்களின் எண்ணிக்கை, கற்களின் இருக்குமிடம், அளவு போன்றவை ஸ்கேன் மூலம் அறியமுடியும். யூக அடிப்படையிலான சிகிச்சை பயன்தராது.
வயிறு, கழுத்து (தைராய்டு), கணையம், கர்ப்பப்பை போன்ற திண்மனான எந்த உறுப்பையும் ஸ்கேன் செய்யமுடிகிறது. அல்ட்ரா ஸ்கேன் மூலம் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அறிய முடியும். பித்தப்பையில் கல், பித்தப்பையில் புற்று, கல்லீரல்,மண்ணீரல் வீக்கங்கள், சுருக்கங்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவைகளை எளிதில் கண்டறியலாம்.

அனைத்துக்கும் மேலாக கர்ப்பகாலத்தில் அதிகளவு பயன்படுகிறது. தாயின் வயிற்றில் 7வது வாரத்திலேயே (அல்லது 45 நாட்களில்) குழந்தை இருதயத் துடிப்பைப் பெற்று வளர ஆரம்பிக்கிறது. 3 மாதத்தில் குழந்தையின் எல்லா உறுப்புகளும் முழுமையாக வளர்ந்து விடுகிறது. இந்த நேரத்தில் ஸ்கேன் செய்து குழந்தையின் உடலில் உள்ள ஊனம், மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டறிய முடியும். சில பெண்களுக்கு கரு கர்ப்பப்பைக்குள் வளராமல் கர்ப்பப்பைக் குழாயில் தங்கி வளரக்கூடும். இதனால் தாய் அபாயகரமான நிலையைச் சந்திக்க நேரிடும். எனவேதான் கர்ப்பிணிகள் 5 மாத காலத்திற்குள் ஒருமுறையாவது ஸ்கேன் செய்வது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது.

கர்ப்பம் தரித்து 45 நாளிலேயே ஸ்கேனில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டறிந்தால் அவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் கண்காணித்து ஆரோக்கியமாக பிறக்கச் செய்வதற்கு மருத்துவ உதவிகள் செய்ய முடியும்.
குழந்தை இல்லாத பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை பாலிக்குலர் ஸ்டடி மூலம் அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கர்ப்பப்பையில் கட்டிகளோ, இதர வளர்ச்சிகளோ, சினைப் பையில் நீர்மக் கட்டிகளோ இருப்பதால் பெண்களின் மாதவிடாய் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இவற்றை உரிய காலத்திலேயே ஸ்கேன் மூலம் கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் அவசியம். புற்றுக்கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.
மஞ்சள் காமாலை நோய் என்பது வைரஸ் தாக்கத்தினால் அல்லது பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்படுவதால் தோன்றுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் யூக சிகிச்சையை ரத்தப் பரிசோதனை மற்றும் தவிர்க்க வேண்டும். ஸ்கேன் செய்தல் மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ள நிலையில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு காமாலை வந்திருக்குமானால் மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் பித்தப்பைக் கல்லால் மஞ்சள் காமாலை வந்திருந்தால் அதற்கும் சேர்த்து தீவிர மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். கல் அடைப்பை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
இதனை அறியாமல் மஞ்சள் காமாலைக்கு தாயத்து கட்டுதல், வேர்கட்டுதல் என செயல்பட்டால் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும்.
பொதுவாக கர்ப்பப்பை சம்பந்தமான ஸ்கேன் எடுக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வயிறு நீரால் நிறைந்திருந்தால் நீர் ஊடகமாக செயல்பட்டு அதன் அடியிலுள்ள கர்ப்பப்பை தெளிவாகத் தெரிய உதவுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் இணைக்கப்பட்டிருக்கும் Probeஎனப்படும் இணைப்புக் கருவியை வயிறு, மார்பு, கழுத்து போன்றவற்றைச் சோதிப்பதற்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்து உபயோகிக்கப்படுகிறது. இன்றைக்கு அலோபதிக்கு மட்டுமல்ல இதர மாற்று மருத்துவ முறைகளுக்கும் ஸ்கேன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
(C.T. ஸ்கேன், M.R.I. ஸ்கேன் உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும். ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பக்க விளைவுகள் இல்லை)


Wednesday, December 11, 2013

காதல் தோல்விக்கு… ஹோமியோ மருந்துகள்! அதிசயம்! ஆனால் உண்மை!

ஆதலினால் காதல் செய்வீர்! இது கவிவாக்கு.காதல் என்ற சொல் மந்திர சக்தியும்,இனிமையும்,வசீகரமும் உடையது.பாலைவனப் பயணமாய் மானிட வாழ்க்கை தகித்தாலும் காதல் நுழைந்து விட்டால் ஈரநிலமாய்,சுகந்தக் காற்றாய்,தாகம் தீர்க்கும் அருஞ்சுனை நீராய் எல்லாம் மாறிவிடும்.காதலுக்குக் கண்கள் இல்லை-ஆம்! சாதி,மதம்,இனம்,மொழி பேதங்களைப் பூதக்கண்ணாடி அணிந்து உற்றுப் பார்க்கிற கண்கள் இல்லை! இதயத்தால் பார்ப்பது காதல்!இதயத்தால் பேசுவது காதல்!இதயத்தால் வாழ்வது காதல்! ஆம்காதலுக்குக் கண்கள் இல்லை-இனிய இதயம் உண்டு!


கண்டதும் காதல்!இது ஆபத்தானதுஎன்பது வாழ்ந்தோரின் அனுபவ எச்சரிக்கை; ஒரு தலைக்காதல்இது பரிதாபகரமானது. மனங்களைப் புரியாமல்,மனங்களைப் பரிமாறாமல் பார்த்தவுடன் காதல் பூ எப்படிப் பூக்க முடியும்?அது காதல் அல்ல நண்பர்களேவெறும் இனக்கவர்ச்சி! நிழலை நிஜமாகக் கருதி விரட்டிப் பிடிக்க முயன்று ஓய்ந்து போகும் அறியாக் குழந்தைகளாய் பல இளைஞர்கள் இனக்கவர்ச்சியைக் காதல் எனக் கருதிபொய் வாழ்க்கை வாழ்கின்றனர்.இவர்களின் கற்பனைக் காதல்கானல் நீராய்,காகிதப் பூவாய்,பொய்மான் வேட்டையாய் ஆனதை அறிந்தபின் இதயம் நொறுங்கி நடைபிணங்களாய் ஆகின்றனர்.

நிவேதா,கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி.இசை,பாடல்,பேச்சு,நடிப்பு,படிப்பு அனைத்திலும் பிரகாசித்தாள்.நகருக்கு வெளியே அமைந்திருந்த அவளது கல்லூரிக்கு தினமும் நகரப் பேருந்தில் போய்வந்தாள்.பேருந்தில் நிரம்பி வழியும் மாணவ மாணவியரின் கலகல சத்தங்களுக்கிடையில் நிவேதா அமைதிச் சிலையாய் வீற்றிருப்பாள்.முதுகலை மூன்றாமாண்டு மாணவர் சுந்தர் எதிர்பாராத நிலையில் கடித உறை ஒன்றை அவளது கைகளில் திணித்த நாளில் அதிர்ச்சியும் பதட்டமுமாய் செய்வதறியாமல் திகைத்தாள். வீட்டில் யாருமறியா வண்ணம் கடிதத்தைப் படித்தாள்.

வாசனைச் சொற்களால் அவளை வர்ணித்து,காதலிப்பதாக அறிவித்திருந்தான் சுந்தர். நடுக்கமும் பீதியும் குழப்பமும் சூழ்ந்திருந்த போதிலும் அவளது இதயப் பிரதேசத்தில் கடிதச் சொற்கள் இனிய தூறலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தின. கடிதத்தை ஒளித்துப் பாதுகாத்தாள்.


நிவேதா பலவிதங்களில் திறமைசாலி.காதல் பாடத்தில் மட்டும் அவள் பேதை.அவளைப் புரியமுடியாமல் தவித்தான் சுந்தர். கடிதம் தந்த பின்னர்..அவள் மனம் புண்பட்டு விடக் கூடாது என்றெண்ணி வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த விதத்திலும் அவளை அவன் அணுகவில்லை. நாட்கள் விரைந்தன. கல்லூரி நாட்கள் எனும் கடன்வாங்கிய வசந்தத்தை அவளிடமிருந்து காலம் பறித்து ஒடியது. விண்ணில் பறந்த பறவை வீட்டுச் சுவர்களுக்குள் மட்டுமே சிறகசைத்தது.

சுந்தரின் நிலை என்ன? அவன் இன்னும் தன்னை நேசிக்கிறானா?அல்லது வேறு பெண்ணை நாடிவிட்டானா?இழப்பின் கனத்தால் மனிதன் வலி பெருகிக் கொண்டிருந்த போது இன்னொரு சோகமின்னல் தாக்கி நிலைகுலைய நேர்ந்தது.அவளது அன்புத் தந்தை இரவுப் பயணம் ஒன்றில் இருதயவலி ஏற்பட்டு இறந்து போனார்.அப்பாவின் மரணமும்,அம்மாவின் விதவைக் கோலமும்,ஆண்துணையற்ற வீட்டின் வெறுமையும் வேதனைகளை பன்மடங்காக்கின.

நிவேதாவின் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் துயரிலிருந்து மீண்டு வந்தாள்.உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் தேற்றித்தேற்றி அவள் தனது மிச்சவாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டாள். நிவேதா மட்டும் நிம்மதியிழந்து கிடந்தாள். சரியாகச் சாப்பிடுவதில்லை. மலர்ந்த பூவாய் மணம் பரப்பியவள் வாடிவதங்கி உயிரற்று ஒதுங்கிக் கிடந்தாள். மகளின் நிலைகண்டு கவலைக்குள்ளான அவளது அம்மா மருத்துவ உதவி கேட்டு வந்தார். நிவேதாவைத் தனியே விசாரித்த போது அவளது இரட்டை இழப்புக்களின் சோகங்களை உணரமுடிந்தது.


வலிநீக்கி மருந்துகள் எல்லா வைத்திய முறைகளிலும் உண்டு.மனவலியை நீக்கும் மருந்து ஹோமியோபதியில் மட்டுமே உண்டு . நிவேதாவை இழப்புத் துயரின் தாக்குதலிலிருந்து மீட்க, மனரணத்தை ஆற்ற இக்னேஷியா(IGNATIA) என்ற அற்புதமான ஹோமியோபதி மருந்தை அளித்தோம்.வழக்கத்திற்கு மாறாக அன்றிரவு துயரங்களின் அழுத்தம் குறைந்து ஆழ்ந்து தூங்கிவிட்டாள் என்பதை மறுகாலை அவளது அம்மாவின் போன் தகவல் மூலம் அறிந்தோம். ஒரு மாத காலம் கழித்து ஒரு நாள் நிவேதாவைச் சாலையில் சந்தித்தபோது புத்துணர்வோடும் புன்முறுவலோடும் வணக்கம் கூறினாள்.ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிவதாகத் தெரிவித்து விடைபெற்றாள்.


ஒவ்வொரு மனித வாழ்க்கையும் எண்ணற்ற தோல்விகளை,இழப்புகளை,துயரங்களைச் சந்தித்தே தீரும். அவை ஒவ்வொன்றும் முற்றுப்புள்ளி அல்ல.வாழ்வியல் கடமைகளையும் லட்சியங்களையும் நோக்கிய பயணம் ;எக்காரணத்தாலும் முடமாகிவிடக்கூடாது. ஹோமியோபதி மருத்துவம்மட்டுமே மனிதனின் பிரச்சனையை அவனது மனநிலை, வாழ்நிலை,சூழ்நிலை அனைத்துப் பின்னணிகளோடும் ஆய்வு செய்கிறது. துயரங்களிலிருந்து மனிதனை விடுவித்து வாழச் செய்கிறது. வாழ்க்கையின்
சம்மட்டி அடிகள் தாங்காமல் தற்கொலைக்குத் தயாராகிவிட்ட மனித மனத்தை ஆரம்மெட்(AURUM MET) எனும் ஹோமியோபதி மருந்து மாற்றியமைத்து வாழ வைக்கிறது.காதலில் தோற்று விரக்தியுற்ற,ஏமாற்றமடைந்த(LOVE DISAPPOINMENT)மனங்களை மீட்க இக்னேஷியா மட்டுமல்ல நேட்ரம்முர் பாஸ்-ஆசிட் ஹயாசியாமஸ் மற்றும் பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன.அவரவர் தோல்வியின் துயரத்தின் காரணம்,தன்மைக்கேற்ப இம்மருந்துகள் பயன்படுகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே! ஹோமியோபதி மனிதகுலத்தின் வாழ்க்கையைக் காப்பதற்கே!

கர்ப்பிணிகளுக்குப் பயோ மருந்துகள்

முதல் & இரண்டாம் மாதம்- நேட்ரம் பாஸ் 6x : 
 அதிக உமிழ்நீர்சுரப்பு; குமட்டல்; வாந்தி, கர்ப்பகால மஞ்சள் காமாலை, வயிற்றுப் பூச்சிகள்; இடுப்பு. மூட்டு வலிகள், மலப்போக்கு ஏற்படாமல் தடுத்தல். 

மூன்றாம் & நான்காம் மாதம்- பெர்ரம் பாஸ் 6x :          
 இரத்த சோகையை நீக்கும்; தாய்க்கும்,கருவிலுள்ள குழந்தைக்கும் தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்யும்; சோர்வை அகற்றும்; ரத்தக் கசிவுகள் ஏற்படாமல் தடுப்பு மருந்தாக செயல்படும். 

ஐந்தாம் & ஆறாம் மாதம்- கல்கேரியா பாஸ் 6x :
குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; குழந்தையின் தலை வீங்காமல்; பெரியதாகாமல் தடுக்கும்; எல்லா                   உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். 

ஏழாம் & எட்டாம் மாதம்- காலிபாஸ் 6x : 
 கர்ப்பிணித் தாய்க்கு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும்     எரிச்சலைத் தடுக்கும்; நன்கு சிறுநீர் வெறியேறும்; சிறுநீர்ப்பாதை தொற்றுக்களைக் குணமாக்கும்; கால் வீங்காது; பிரசவம் பற்றிய பய உணர்வை நீக்கும். பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் நிகழ உதவும். மேலும் பிறக்கும் குழந்தை மூளைத்திறன் உள்ள புத்திசாலி யாகப் பிறக்க, பிறந்தபின் தோல் நோய் வராதிருக்க, அடிக் கடி சளித்தொல்லைகள் ஏற்படாமலிருக்க KP 6x பயன் படும். 

ஒன்பதாம் & பத்தாம் மாதம்- நேட்ரம் மூர் 6x :
பிரசவ காலத்தில் விட்டு விட்டு வரும் வலியை விரைவுபடுத்திச் சுகப்பிரசவம் ஏற்படச்செய்யும். பிறக்கும் குழந்தை குறித்த காலத்தில், பேசவும், நடக்கவும், போலியோ வராமல் தடுக்கவும் NM பயன்படும்.
இம்மருந்துகளை குறிப்பிட்ட மாதங்களில் தினமும் காலை இரவு இருவேளைகள் தவறாமல் கொடுத்து வந்தால் கர்ப்பிணிகளின் நலம் பாதுகாப்பாக அமையும். குழந்தை ஆரோக்கியமாக, நல்ல வளர்ச்சியுடன் பிறக்கும். சுகப் பிரசவம் ஏற்படும். இருப்பினும் பயோவிலுள்ள 12 மருந்துகள் அனைத்தையும் கர்ப்பகாலத்தில் தேவைக்கேற்ப இடையிடையே சில நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த பயோ மருந்தை எந்தெந்தக் குறிகளுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற விவரத்தைப் பார்க்கவும்.

கர்ப்பகால வாந்தி      -     காலிமூர் (KM)
புளிப்பு மிக்க வாந்தி   -    நேட்பாஸ் (NP)
கசப்பான பித்த வாந்தி -    நேட்சல்ப் (NS)
நீர் போன்ற வாந்தி    -    நேட்மூர் (NM)
சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் வாந்தியாகுதல் - பெர்.பாஸ் (FP)
காலைநேரக் குமட்டல் -    கல்-பாஸ், காலி-பாஸ், நேட்-மூர்.
வாய்க்கசப்பு     -    நேட்சல்ப் (NS)
அதிகளவு எச்சில் ஊறுதல்  -    நேட்மூர் (NM)
கர்ப்பகால மலச்சிக்கல்      -     நேட்மூர் (NM), சிலிகா (S)
அசுத்த ரத்தக் குழாய்வீக்கம் (பச்சை நரம்புப்புடைப்பு)-     கல்.புளோர் (CF)
கால் வீங்குதல்  -    நேட்.சல்ப் (NS)
மார்பகம் வீங்குதல்    -    பெர்பாஸ் (FP), காலிமூர் (KM)
கர்ப்பகாலத்தில் பொதுவாக ஏற்படும் சோர்வு, பலவீனம்-   காலி.பாஸ் (KP)
அஜீரணத் தொந்தரவுகள்     - நேட்.பாஸ் (NP)
பல்வலி   - கல்.பாஸ் (CP), கல்.புளோர். (CF)
பிரசவ வலி ஏற்பட்டதும் 10,15 நிமிடத்திற்கு ஒருமுறை
சில வேளைகள் தர வேண்டிய மருந்து  -     காலிபாஸ் (KP)
பிரசவ நேர வலி - மெக்.பாஸ் (MP),காலி பாஸ் (KP)
இரத்த ஒழுக்கு  -    கல்.புளோர் (CF), காலி பாஸ் (CP)
பிரசவத்திற்குப் பின்கர்ப்பப்பை சுருங்காமலிருத்தல்  - கல்.புளோர் (CF)
பிரசவத்திற்குப் பின் சோர்வு - காலி பாஸ் (KP)
(Dr.S.வெங்கடாசலம், Dr.V.ஆவுடேஸ்வரி எழுதிய பல்லாயிரம் நோய்களைத் தீர்க்கும் பன்னிரண்டு பயோ மருந்துகள்நூலிலிருந்து)